Skip to main content

தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதம் உயர்வு

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Increase in fine imposed for not putting up name board in Tamil

 

தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிடில் இனி அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிடில் இனி அபராதம் விதிக்கப்படும் எனவும், அவ்வாறு தமிழில் பெயர்ப்பலகை வைக்கப்படாத உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகை 50 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக ஆக உயர்த்தி விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்