Skip to main content

முன்னாள் திமுக பெண் மேயர் படுகொலை... பதற்றத்தில் நெல்லை (படங்கள்)

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே பட்டப்பகலில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர், அவரது கணவர், வீட்டு பணி பெண் ஆகிய 3 பேரை மா்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிடடனர். நகைக்காக கொலை நடந்ததா, அல்லது சொத்து தகராறில் கொலை நடந்ததாக என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது கணவர் முருகன்சங்கரனுடன் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தார். முருகன்சங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் பிரியா என்ற மகள் திருச்சியில் குடும்பத்துடன் உள்ளார், அடுத்த மகள் கார்த்திகா பொற்றோர்களின் வீட்டின் அருகிலேயே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவா் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் இன்று பிற்பகலில் உமாகேஸ்வரி, அவரது கணவர் முருகன்சங்கரன் மற்றும் வீட்டு பணி பெண் மாரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேரையும் கத்தியால் குத்தி விட்டு உமாமகேஸ்வரி தப்பியோடிவிட்டனர். மூன்று பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

அக்கம் பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லாததால் கொலை நடந்த தகவல் பல மணி நேரம் வெளியில் தெரியவில்லை. மாலையில் அவர்களது மகள் கார்த்திகாக கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கொலை சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் அா்ஜுன்சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் மூன்று பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலை சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது வீட்டு முன்பு தி.மு.க.வினர், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

 


கொலை சம்பவம் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதற்கட்ட விசாரணையில் கொலையான உமாமகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த செயின், கையில் அணிந்திருந்த வளையல்கள் காணாமல் போய் உள்ளது எனவே ஆதாயத்திற்காக நடந்த கொலையாக இருக்காலம் என சந்தேகிக்கிறோம். கொலையாளிகளை பிடிப்பதற்கு காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடிஅருணா அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இரங்களைத் தெரிவித்த அவர் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி  கழகத்திற்கு பேரிழப்பு என்று கூறினார். கொலைச்சம்பவம் குறித்து   மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக கொலை நடந்ததா அல்லது சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான உமாமகேஸ்வரி நெல்லை மாநகரத்தின் முதல் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.