Skip to main content

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஓய்வு... பிரிவு உபச்சார விழாவில் பகிர்ந்துகொண்ட சுவாரசியங்கள்

Published on 29/11/2018 | Edited on 29/11/2018
pon manicavel


 

ரயில்வே மற்றும் சிலை தடுப்புப்பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேல் நாளையோடு பணி ஓய்வு பெறுகிறார். அதனால் இன்று சென்னை அயனாவரத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஐ.ஜி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் சில அறிவுரைகளையும் வழங்கினார். ஒரு குற்றம் நடக்கிறதென்றால் அந்தப் பகுதியில் இறங்கி முழுமையாக அலசி, ஆராய்ந்து விசாரிக்க வேண்டும். தவறு உறுதியானால் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று குற்றம் புரிந்தவரை கைது செய்யவேண்டும்.


உடனடியாக கைது செய்யக் கூடிய சம்பவங்கள் மற்றும் சட்டங்களை காவலர்கள் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும். அதன்படி துரிதமாக செயல்படவும் வேண்டும். யார் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யக் காவலர்கள் பயப்படக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை ஒரு காகிதத்தில் காவலர்கள் எழுத வேண்டும். அப்போது மட்டுமே அது சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும், இல்லையென்றால் அது வாய்வார்த்தையாக போய்விடும், குற்றவாளிகளை அடித்து உண்மையை வரவழைக்க முடியாது. நான் கையாண்ட ஒரு வழக்கில் குற்றவாளியை அழைத்து எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதேபோல் இருக்கையை அவனுக்கும் கொடுத்தேன். எனக்கு அளித்த உணவு போன்ற அனைத்து வசதிகளையும் அவனுக்கும் செய்துகொடுத்தேன். பிறகு அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி இதனால் பிற்காலத்தில் கிடைக்கும் தண்டனைகள் பற்றி விளக்கி அவனுக்கு 15 நிமிடங்கள் கால அவகாசம் அளித்தேன்.


இதையடுத்து, அவனே தானாக வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். காவலர்கள் நினைத்தால் 6 மாதத்தில் ஒரு குற்றவாளியை திருத்த முடியும். போலீஸாருக்கு பெரும் கடமை இருக்கிறது. அதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும். என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன். என்று கூறினார். சிலைகடத்தல் தடுப்புப் பிரிவிற்கு பொன்.மாணிக்கவேல் தலைமையேற்றபின்பு பல அரிய சிலைகள் மீட்கப்பட்டது. வெளிநாட்டிலிருக்கும் சிலைகளும் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தன்னை தரதரவென இழுத்துச் சென்றதாக செந்தில் பாலாஜி சொன்னார்” - மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜியிடம் நேரடியாக விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மனித ஆணையம் தாமாக வந்தும் விசாரணை செய்யலாம். புகார்கள் வந்தாலும் விசாரணை செய்யலாம். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் இன்று விசாரணை நடத்தினேன். அவர் அசதியுடன் காணப்பட்டதால் சிறிது நேரம் காத்திருந்து பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினேன். நெஞ்சு வலி இருப்பதால் அதிகம் பேச இயலவில்லை என செந்தில் பாலாஜி என்னிடம் கூறினார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார்.

 

அமலாக்கத்துறை தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், தன்னை தரதரவென இழுத்து சென்றதால் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் படுத்திருந்ததால் அவருடைய காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை நான் பார்க்க முடியவில்லை'' என்றார். அப்பொழுது செய்தியாளர்கள் 'அமைச்சர் என்பதால் மட்டும் மனித உரிமை ஆணையம் சார்பில் விசாரிக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ''அப்படி எல்லாம் இல்ல எங்கு மனித உரிமை விதிமுறை மீறல் நடந்தாலும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இன்று அமைச்சரை விசாரித்ததால் ஊடகங்களில் பெரிதாக பேசுகிறீர்கள். மற்றபடி எல்லா மனித உரிமை மீறல் விவகாரங்களிலும் விசாரணை நடத்துவோம்'' என்றார்.

 

 

Next Story

'எதற்கெடுத்தாலும் அரசியல் கட்சிகள் அர்ச்சகர்கள் குரவளையையே பிடிக்கின்றன'-பொன்.மாணிக்கவேல் பேட்டி   

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

'No matter what, the political parties are holding the priests' - Pon.Manikavel interview

 

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்தநிலையில் அங்கு உயிரிழந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஏற்றி விட்டோம். அதற்காக இன்று ஒன் ஹவர் ஆகிவிட்டது. மொத்தத்தில் கோவிலில் இருக்கக்கூடியவர்களை இரண்டு ஸ்டாப்பாக பிரிக்க வேண்டும். ஒன்று அறநிலை துறை அதிகாரிகள். இன்னொருவர்கள் கோவிலில் உள்ள ஸ்டாப். இவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் என டிபார்ட்மெண்ட் ஏற்றுக் கொள்வதில்லை.

 

இதை யாரும் கவனிக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இதனை கவனிக்க வேண்டும். முக்கியமாக அரசியல் கட்சிகள் எதற்கெடுத்தாலும் கோவிலில் உள்ள அர்ச்சகர்களின் குரல்வளையை பிடிக்கிறார்கள். நல்லா புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வேற, அவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லை. மணியடிப்பவர்கள், மெய்க்காப்பாளர்கள், வாட்ச்மேன், கணக்குப்பிள்ளை, கோவில் சூப்பிரண்ட் என்று இருப்பார்கள். இவர்கள் யாரையும் டெம்பிள் ஸ்டாப்பாக எடுத்துக் கொள்வதில்லை'' என்றார்.