Skip to main content

அயனாவரம் சம்பவம் -  வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்  

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
vk

 

அயனாவரத்தில் 12வயது சிறுமிக்கு நேர்ந்த  பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் மற்றும் திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.

 

அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறையினர் திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

vk3

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  திருநங்கை அப்ஸரா, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனையே தீர்வாகும் என்று வலியுறுத்தினார். 

 

தொடர்ந்து பேசிய நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்,  வீடுகள் உள்ள குடியிருப்பு பகுதிகளிலேயே இவ்வாறான குற்றங்கள் நடக்கிறது எனில் வேறு எதுதான் பெண்களுக்கு பாதுகாப்பான பகுதி என்று வினா எழுப்பினார். இந்தக் குற்றத்திற்கு நீதித்துறை காவல்துறை மற்றும் அரசாங்கம் சரியான தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

.  இதையடுத்துப் பேசிய சிறுமியின் சகோதரி பிரியா, தன் தங்கை சத்தம் போட்டும் யாருமே சிறுமியை கண்டு கொள்ளவில்லை என்றார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து உள்ளனர் என்றும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

vk4

 

அடுத்து பேசிய நடிகை சாக்‌ஷி,  மதுபோதையில் இருந்த குற்றவாளிகள் திட்டமிட்டே இந்த பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்றும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வெளிநாட்டில் உள்ளதைப் போல மர்ம உறுப்பை துண்டிக்க வேண்டும் என்றும்  மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு சமுதாயம் மட்டுமே பொறுப்பாகாது என்றும் பெற்றோர்களின் அறியாமையும், கவனக் குறைவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் நடிகை சாக்ஷி தெரிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து; வெடித்து சிதறிய சமையல் சிலிண்டர்; அயனாவரத்தில் பரபரப்பு

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

A house fire; cylinder incident in Ayanavaram

 

சென்னை அயனாவரத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை தலைமைச் செயலக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயனாவரம் மேடவாக்கம் குட்டியப்பன் தெருவில் தனசேகர் என்பவர் வீட்டில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மொத்தமாக நான்கு தளங்கள் இந்த வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

 

கீழ்பாக்கம், அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீச்சி அடித்து தீயணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் விடுதி சிதறியது. இதில் முதல் தளத்தில் பெருமளவில் சேதம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்தது. இந்த விபத்தால் அருகிலிருந்த வீட்டின் கட்டிடங்களும் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித சேதமோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

Next Story

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (31.05.2023) காலை  11 மணியளவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழருவி மணியன் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.