Skip to main content

கனிமொழியை அசரவைத்த சிறுமியின் மனிதநேயம்...

Published on 16/05/2021 | Edited on 16/05/2021

 

The humanity of the girl who made Kanimozhi tremble ...

 

தனது தொகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றுத் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண வேலைகளை ஆய்வு செய்து வருகிறார் கனிமொழி எம்.பி.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த கரோனா கால மக்களுக்கான நிவாரணத் தொகையை மே.5 அன்று கோவில்பட்டியின் சண்முகசிகாமணிநகர்ப் பகுதியில் வழங்கிக் கொண்டிருந்தார் கனிமொழி.

 

மக்களுக்கான நிவாரணத் தொகையினை கனிமொழி வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென மேடை ஏறிய 11 வயது சிறுமி, தன் கடிதத்துடன் 1,970 ரூபாயையும் சேர்த்து அவரிடம் கொடுத்திருக்கிறார். பரிவோடு பணத்தையும் கடிதத்தையும் பெற்றுக் கொண்ட கனிமொழி கடிதத்தைப் படித்ததும் கண்கலங்கிவிட்டார். கிட்டத்தட்ட அவரது மனம் உடைந்த நிலைதான்.

 

The humanity of the girl who made Kanimozhi tremble ...

 

''என்னோட பேர் ரிதனா. நான் 5 முடித்து 6வது வகுப்பு போகப் போகிறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. என்னோட அப்பாவின் வைத்தியச் செலவிற்காக நான் சேமித்து வைத்த பாக்கெட் மணி தான் இது. அப்பா வைத்திய வசதி கிடைக்காமல் இறந்து போனார். என்னயப் போல கரோனாவால அப்பாக்களை இழந்து எந்த ஒரு பிள்ளையும் தவிக்கக் கூடாது. அதனால் கரோனா நோய்த் தடுப்புப்பணியில இந்தப் பணத்தச் நேர்த்துடுங்க'' என்று சொல்லித் தன் கடிதத்தையும் பணத்தையும் கொடுத்திருக்கிறார். அவரால் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதமும் பணமும் அவளின் மனித நேயமும் தான் கன்மொழியை நிலைகுலைய வைத்திருக்கிறது.

 

அடுத்தவர்களுக்குத் தெரியாமல் தன் கண்களைத் துடைத்துக் கொண்ட கனிமொழி, வாஞ்சையுடன் சிறுமியின் தலையைத் தடவியவர், அவளது படிப்பு குடும்பச் சூழலை விசாரித்தவர், நிச்சயம் பணத்தச் சேர்த்துடுறேன். ஒன்னோட படிப்புச் செலவுகளையும் நான் ஏற்றுக்கொண்டு செய்து தருகிறேன் என அந்தச் சிறுமியிடம் தன் உறுதியையும் ஆறுதலையும் தந்திருக்கிறார் கனிமொழி.

 

ரிதனா என்ற அந்தப் பள்ளி மாணவி, கோவில்பட்டி ராஜீவ் நகர்ப் பகுதியில் வசித்து வந்த நாகராஜ், அமுதா தம்பதியரின் ஒரே மகள். தந்தை பி.காம் பட்டதாரி. தாய் அமுதா எம்.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ். திருமணத்திற்கு முன்பு வரை அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி ஒன்றின் விரிவுரையாளர் பணியிலிருந்தவர் அமுதா. திருமணத்திற்குப் பின்பு மகளையும் வீட்டு வேலைகளையும் கவனிக்கும் பொருட்டு தன் கல்லூரி வேலையைவிட்டிருக்கிறார். அதே சமயம் கணவருக்கு பெங்களூரூவில் நிறுவனம் ஒன்றின் மேலாளர் பணி கிடைக்க, குடும்பத்துடன் அங்கே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். நாகராஜின் வேலை, அமுதாவின் பட்டப்படிப்பு தவிர அவர்களிடம் வேறு சொத்தோ வருமான வழிகளோ கிடையாது. இதுதான் அவர்கள் குடும்பத்தின் உறைமோர்.

 

பெங்களூரில் ரிதனா மெட்ரிக் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்று கொண்டிருந்த நேரத்தில் அவளின் செலவிற்காக தந்தை அன்றாடம் பாக்கெட் மணி கொடுப்பது வழக்கம். அதில் பைசா செலவழிக்காமல் அப்படியே சேமித்து வைத்திருக்கிறாள் ரிதனா. அது கணிசமான தொகையளவு வளர்ந்திருக்கிறது.

 

The humanity of the girl who made Kanimozhi tremble ...

 

பெங்களூரில் அன்றாடம் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள், கால அவகாசமில்லாத காரணத்தால் பெரும்பாலும் தங்களின் பிள்ளைகளைக் காலை உணவோடு அனுப்புவது ஒருசில வேளைகளில் நடப்பது இயல்பானதுதான்.

 

ஆனால் காலை உணவு முடித்து மதியம் உணவையும் ரிதனா கையோடு கொண்டு வந்து விடுவாள். மதிய உணவு இடைவேளையின் போது தனது வகுப்பின் சக மாணவிகளில் சிலர் மதிய உணவின்றித் தவிப்பதையும் பார்த்த ரிதனா, தன் உணவை அவர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். உணவு இல்லாத சமயம், 8540 ரூபாய் என சேர்ந்த தன் சேமிப்பு பணத்திலிருந்து பிஸ்கட், ரொட்டி என்று வாங்கிக் கொடுத்து அவர்களின் பசியமர்த்தியிருக்கிறார். பல வேலைகளில் தன் சக மாணவிகள் நோட்புக் எழுது உபகாரணங்கள் இல்லாமல் தவித்தது கண்டு அவர்களுக்காகச் தனது சேமிப்பு பணத்தைச் செலவு செய்திருக்கிறாள். இப்படித்தான் அந்தப் பிஞ்சு மனதில் இரக்க குணமும், மனிதநேயமும் துளிர்த்திருக்கிறது. காலச் சூழல்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. விதி, ரிதனாவின் தந்தை நாகராஜை ரத்த உறைவு நோய் தாக்கியிருக்கிறது. 2020 பிப்ரவரி ஆரம்பத்தில் அவரை பெங்களூரின் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார் மனைவி அமுதா. வீட்டின் மொத்த சேமிப்பின் லட்சங்கள் காலியாகியும், வந்த நோய் போனதானத் தெரியவில்லை.

 

அப்பா, நீங்க கொடுத்த பாக்கெட் மணிய ஒங்க சிகிச்சைக்காக நா சேத்துவைச்சப் பணம்பா இது. ஒங்க வைத்தியச் செலவுக்கு வச்சுக்குங்க என்று சொன்ன மகளிடம், வேண்டாம்மா. அது ஒனக்கானது வைச்சுக்கோ என யதார்த்தமாகச் சொன்ன தந்தை நாகராஜ் 2020 பிப் 10ல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறார். கணவனை இழந்ததை கைம் பெண். கையில் ஒரே மகள். ஒண்டியாகவே கோவில்பட்டி திரும்பிய தாய் அமுதா, அன்றாடம் கொத்தனார் வேலை பார்த்துப் பிழைப்பை நகர்த்துகிற தன் தந்தையின் ஆதரவிலிருக்கிறார் தற்போது.

 

கரோனா கொடூரத்தால ஆந்திராவில் உயிரிழந்த தாயின் மடியில் அவளது பிள்ளை கிடந்து அழுவதையும் கரோனாவால் பலபேர் செத்து விழுந்து அவுக பிள்ளைக கதறி அழுவதையும்,  தொலைக்கட்சியில் பாத்த சின்னப்புள்ள ரிதனாவோட மனசு பாதிச்சிருக்கு போல. தன்னயப் போல, வேற எந்தப் பிள்ளைகளும் கரோனாவால அப்பா, அம்மாயில்லாமத் தவிக்கக்கூடாதுன்னு தான் ரிதனா, தன்னோட சேமிப்புல, அவ, மத்தவங்களுக்கு உதவுனது போக மிச்சமுள்ள 1970 ரூபாயையும் கரோனாத் தொற்று தடுப்பு நிதிக்குத் தரணும் சொன்னாத நானும் சரிம்மான்னு சொன்னேன். அதக் குடுக்குற வழி தெரியாமயிருந்தப்ப கனிமொழியம்மா இந்தப் பக்கம் நிவாரணப் பணிக்காக வந்தப்ப அவளே எழுதுன கடிதத்தையும் பணத்தையும் சேர்த்து அவங்க கிட்டக் குடுத்தா. இப்ப நா கணவனை இழந்து புள்ளையோட ஒண்டியாயிட்டேன். பொழைப்புன்றது பெரிய பாரமாயிருக்கு. குடும்பத்தில முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைன்னு ஸ்டாலின் அய்யா சொல்லியிருக்காக. வேலை கெடைக்கும்னு நம்பிக்கையோடிருக்கேன்யா. தழுதழுத்த குரலில் சொன்னார் ரிதனாவின் தாய் அமுதா.

 

குழந்தைகள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். நம்பிக்கை தானே வாழ்க்கை. என்கிறது மானுட தர்மம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.