நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நடந்த ஹெலிகாப்ட்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் விபத்துக்கான காரணம் குறித்த இராணுவ விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மறுபக்கம் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் வீரவணக்க நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டியை ராணுவம் மீட்டு உள்ளது. அது வெலிங்டன் இராணுவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. கருப்பு பெட்டி மீட்கப்பட்டதன் மூலம் விபத்துக்கான காரணம் விரைவில் தெரிய வரும் என வெலிங்டன் இராணுவ வட்டாரத்தில் கூறப்படுகிறது.