Skip to main content

கனமழை எதிரொலி; மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

NN

 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கன மழை பொழிந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியைத் தாண்டி உள்ளது. இன்று (15/11/2023) காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,327 கன அடியிலிருந்து 3,320 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 24.994 டிஎம்சி ஆக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்