சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை;
பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை
சென்னையில் இடி,மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையெங்கும் மழை வெள்ளம் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொள்ளத்தே வையில்லை எனவும் தெரிவித்துள்ளது.