Skip to main content

தொழில் அதிபர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

 

kannan


சேலம் சங்கர் நகர் ஹரேகிருஷ்ணா சாலையைச் சேர்ந்த தொழில் அதிபர் கண்ணன் (53). இவர் சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதன்மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் காவல்துறைக்கு புகார்கள் சென்றன. 


இதையடுத்து அஸ்தம்பட்டி காவல்துறை உதவி ஆணையர் ஆனந்தகுமார், ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17, 2019) காலை கண்ணன் வீட்டில் திடீரென்று சோதனை நடத்தினர். அவருடைய வீட்டில் இருந்து, சட்ட விரோத தொழில்கள் தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், 500 ரூபாய் நோட்டு கட்டுகள், 200 ரூபாய் நோட்டு கட்டுகளும் ஏராளமாக இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர், சேலம் வருமானவரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். 


அதனைத்தொடர்ந்து, வருமானவரித்துறை உதவி ஆணையர் சிவசெல்வி தலைமையில் அதிகாரிகள் அங்கே விரைந்து வந்து விசாரித்தனர். மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்த ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றினர். 40 லட்சம் ரூபாய்க்கு மேல் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. 


மேஜை டிராயர், பீரோ அலமாரிகளில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களையும் கைப்பற்றினர். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் சிக்கின. 


இது தொடர்பாக தொழில் அதிபர் கண்ணன், அவருடைய மனைவி ஆகியோரிடம் வருமானவரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 


மக்களவை தேர்தல் நேரத்தில் மொத்தமாக 40 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் சிக்கியுள்ளதால், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவரிடம் அரசியல் கட்சியினர் யாராவது கொடுத்து வைத்தார்களா? அல்லது ஹவாலா முறையில் கைமாற்றப்பட்ட பணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் காவல்துறை மற்றும் வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.