Skip to main content

காவலர் பணிக்கான வயது வரம்பில் தளர்வு கோரி போராட்டம்! 

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
Guard work


புதுச்சேரியில் புதியதாக நியமிக்கப்படவுள்ள 537  காவலர் பணிக்கான தேர்வினில் வயது வரம்பு தளர்த்த வேண்டும் என கோரி பட்டதாரி இளைஞர்கள்  பல்வேறு புகார் மனுக்கள் அரசுக்கு அளித்ததுடன் பல்வேறு போராட்டங்களையும்  நடத்தினர். 
 

முதல்வர் நாராயணசாமி வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தி தருவோம் என உறுதியளித்தார். அது சம்பந்தமாக கோப்புகள் அனுப்பியதாகவும்  கூறினார். 


இந்த நிலையில் தேர்விற்கான விண்ணப்பம் பெறும் கடைசி தேதி 22.09.2018 என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் வயது வரம்பு தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்பட வில்லை.
 

அதேசமயம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டப்படி ஆர்.ஆர் மாற்றம் கொண்டு வந்த பிறகு தான் வயது வரம்பில் தளர்வு உருவாக்கப்படும் என கூறுவதாக  தகவல் வெளியாகியுள்ளன.
 

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எடுக்கும் முடிவிற்கு ஏற்றபடி துணைநிலை ஆளுநர் ஒரு முறை தளர்வு ஏற்படுத்தி தர அதிகாரம் உள்ளது என கூறும் பட்டதாரி இளைஞர்கள், வேண்டுமென்றே பல்வேறு காரணங்களை காட்டி பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இழந்துள்ள இளைஞர்களுக்கு எதிராக நடப்பதாக குற்றம் சாற்றுகின்றனர்.
 

தற்போது பொதுபட்டியல் 18 - 22, பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 - 25, தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவருக்கு 18 -  27 என வயது வரம்பு உள்ளது.  ஆனால் தமிழகத்தில் பொதுப்பட்டியல் 18 - 24,  பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 - 26 வயது.  தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவர் 18 - 29 வயது என அரசாணை வெளியிட்டு 2017 ஆம் ஆண்டு காவலர்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ரெயில்வே துறை உள்ளிட்டவைகளுக்கும் இதே வரம்புதான்.  
 

 தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் புதுச்சேரி மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை விட இரண்டு ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலம் மட்டும் இரண்டு ஆண்டு குறைத்து வயது வரம்பை வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர். 
 

புதுச்சேரி அரசு நான்கு நாட்களில் தங்களது விண்ணப்பம் ஏற்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் விண்ப்பிக்கும் போது  விண்ணப்பங்களை ஏற்க மறுப்பதாக இளைஞர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
 

அதையடுத்து  ராஜா திரையரங்கம் அருகே ஒன்று கூடிய பட்டதாரி இளைஞர்கள் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சுவாமிநாதன் தலைமையில்  பேரணியாக வந்தனர். 
 

தலைமை தபால் நிலையம் வந்தவர்கள் தபால்  மூலமாக  விண்ணப்பங்களை காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பினர்.  விண்ணப்பத்தினுடன்  வயது வரம்பு தளர்வு கேட்டு வேண்டுகோள் கடிதமும் இணைத்தனர். 
 

 துணைநிலை ஆளுநர் மற்றும் மாநில முதல்வர் பட்டதாரி இளைஞர்களின்  நியாமான போராட்டத்திற்கு மதிப்பளித்து அனுப்பிய விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் எனவும்,  இரண்டு நாட்களில் நல்ல தீர்வு எட்டவில்லை என்றால் சாகும் வரை உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  
 

இப்போராட்டத்தில் புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முருகன், எழிலன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன்,  தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளங்கோ,  தலித் பாதுகாப்பு இயக்கம் ராஜா. இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அறிவுமணி,  இந்திய இளைஞர் முண்ணனி கலைப்பிரியன்,  பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா,  சட்டப்பஞ்சாயத்து ஜெபின்,  அரசியல் களஞ்சியம் கந்தகுமார்,  திரிணாமுல் காங்கிரஸ் எத்திராஜ்,  திராவிடர் கழகம் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர்  பங்கேற்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.