Skip to main content

7 பேர் விடுதலையில் அற்புதம்மாள் சொன்னதை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும்;அரசியல் வேண்டாம்-தினகரன்

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

 

TTV

 

புதுக்கோட்டையில் இன்று மாலை நடக்க உள்ள அண்ணா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு மாவட்டம் முழுவதும் பதாகைள் வைக்கப்பட்டுள்ளது பல இடங்களில் முதல்வரே என்ற வாசகத்துடன் பதாகைகள் இருப்பதால் பலருக்கும் குழப்பம் நீடித்தது இந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த போது.

 

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல் விரைவில் நடைபெற இருக்கின்ற இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலில் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.குட்கா ஊழலில் வேறு யாரையும் மாட்டி விடக்கூடாது என்பதற்காக விஜயபாஸ்கருக்கு மேலும் பதவி கொடுத்து உள்ளனர்.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலையில் அற்புதம்மாள் சொன்னதைப் போல இதில் அரசியல் தலையீடு வேண்டாம் என்ற அடிப்படையில் கவர்னர் விடுதலை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றோ நாளையோ பதவி பறிபோகுமா என்ற பயத்தில் உள்ளார் இதை அதிமுக நிர்வாகிகளே என்னிடம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். தற்போது அதிமுகவினர் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் பேசி வருகின்றனர். தம்பிதுரை பேச்சு பாஜகவினர் அதிமுக கதவை சாத்திவிட்டனர் என்பதை காட்டுகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் நம்ம விஞ்ஞானி செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் எல்லாம் அவரது தொகுதியிலயே டெபாசிட் இழந்து வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும். கடம்பூர் ராஜூ எந்த பாதுகாப்பும் இல்லாம அவர் தொகுதி கிராமங்களுக்குள் சென்று பாதிப்பில்லாம திரும்பட்டும் அப்பவே எங்க எம்எல்ஏக்களை அவர் கூட அனுப்பி வைக்கிறேன்.

 

பாஸ்கரன் புதிக கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்கு.. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் வேறு கட்சியில்இருக்க கூடாதா என்ன? தமிழகத்தில் நடக்கும் எப்பாடி ஆட்சி செயல் இழந்து விட்டது இதற்கு உதாரணம் சிறைத்துறை சொகுசு வாழ்க்கை இதற்கு சிறைத்துறை மந்திரி தான் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.