Skip to main content

வேலைக்கு அழைத்துச் சென்று சிறுமியிடம் அத்துமீறல்! 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது! 

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

girl child case eleven arrested under goondas

 

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 13 வயது சிறுமி ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த அந்த சிறுமிக்கு அவ்வப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சில ஆண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லியுள்ளார். 


இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி சிறுமியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஏற்கனவே செந்துறை பகுதியைச் சேர்ந்த தனவேல், பாலச்சந்தர், வினோத் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


இந்த நிலையில் மேலும் சிலர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை விசாரணையின் மூலம் கண்டறிந்த போலீஸார் அவர்களையும் அவர்களுக்குத் துணையாக இருந்த மூன்று பெண்களையும் கைது செய்துள்ளனர். அதில் சம்பந்தப்பட்ட பெண்கள் சாந்தா, சந்திரா, இந்திரா, ஆண்களில் பிரேம், வெற்றி கண்ணன், மனோஜ், தெய்வீகன், குமார் ஆகியோரை கைதுசெய்துள்ளனர். 

 

இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 11 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.