Skip to main content

காலை மற்றும் மாலையில் குப்பை லாரிகளை இயக்கக் கூடாது - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

n

 

சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் குப்பை லாரிகளை இயக்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் குப்பை லாரிகளை இயக்குவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்கத் தடை விதிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போன்று இரவில் மட்டும் குப்பை லாரிகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்