Skip to main content

வங்கி கடனுக்கு கால அவகாசம் மட்டுமே.. தள்ளுபடி இல்லை!

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
g

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டு விவசாயம் உள்பட வாழ்வாதாரம் இழந்து நிர்கதியாக நிற்கும் விவசாயிகள் . சுய உதவிக் குழுக்கள் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 6  மாதம் வரை தவணை கட்ட வேண்டாம் என்று ஆட்சியர் கூறியுள்ளார். தொடர்ந்து நுண்கடன் வசூலுக்கு தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் வந்து ஆட்சியர் உத்தரவை மீறி பணம் கட்டச் சொல்லி  மிரட்டுவதாக குளமங்கலம், வடகாடு பகுதியில் உள்ள பெண்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர்.

 

 இந்த நிலையில் கடந்த வாரம் விவசாயம், தொழில் சார்ந்த கடன் மற்றும் சுய உதவிக் குழு கடன் மற்றும் வட்டி கட்ட ஒரு வருடம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வதந்தி பரவியதால் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு பக்க மனு நகல் ரூ 60 வரை விற்றனர். மாலை வரை இந்த பரபரப்பு காணப்பட்டது.


இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ்  ஒரு அறிக்கை வெளியிட்டுளார். அந்த அறிக்கையில் விவசாய கடன், சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட கடன்களுக்கு தவனை செலுத்த ஒரு வருடம் முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம் தான் அளிக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி அறிவிக்கவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது வதந்தியே. அதனால் இந்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மனுவோடு ஆட்சியர் அலுவலகம் வந்து அலைய வேண்டாம்.  மேலும் வீண் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.