Skip to main content

அனில் அகர்வாலுக்காக சொந்த மாநில மக்களை அடகு வைக்கும் தமிழக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது -  பாப்புலர் ஃப்ரண்ட் 

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
sterlite

 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’வேதாந்தம் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை முதன் முதலாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தின கிரியில் அமைக்க திட்டமிட்டு வேலைகள் நடந்தன. இதன் ஆபத்தை உணர்ந்த அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வீட்டில் வைத்திருந்த கோடாரிகளை எடுத்து சென்று ஆலையை இடித்து தரைமட்டமாக்கினர். இதை தொடர்ந்து  ஸ்டெர்லைட் ஆலையை அங்கு அமைக்க மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் சரத்பவார் தடை விதித்தார். பின்பு வேதாந்தம் குழுமம் இந்த ஆலையை அமைக்க குஜராத் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் முயற்சி எடுத்தது. அந்த மாநில அரசுகள் இந்த ஆலையினால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்ததால் அனுமதி அளிக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் முயற்சி பலிக்காததால் தூத்துக்குடி குமரெட்டியார்புரத்தை தேர்வு செய்து பல்வேறு தகிடுதத்தங்களில் ஈடுபட்டு தமிழக அரசிடம் அனுமதி பெற்றனர். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலை தூத்துக்குடியின் உருவத்தையே மாற்றி விட்டது. 1997ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையின் உலை ஒன்று வெடித்து அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகினர். ஆனால் இந்த உலை வெடிப்புக்கு விடுதலை புலிகள் அமைப்பு மீது குற்றச்சாட்டை சுமத்தி விட்டு ஆலை நிர்வாகம் தப்பித்துக் கொண்டது.


 
2013ம் ஆண்டில் இந்த ஆலையில் இருந்து வரும் நச்சுக்கசிவால் பல மக்கள் இன்னலுக்கு உள்ளாகியதை தொடர்ந்து ஆலையை இழுத்து மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆலையை இழுத்து மூட உத்தரவிட்டார். இதை தொடந்து உச்சநீதி மன்றத்தை அணுகிய ஆலை நிர்வாகம் 100 கோடி ரூபாய் அபராதம் கட்டி மீண்டும் ஆலையை திறந்தது.

 

இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது.1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டால் 2400 கிலோ கந்தக டை ஆக்ஸைடு வெளியேற்றப்படும். இந்த கந்தக டை ஆக்ஸைடு தூத்துக்குடியின் அனைத்து வளத்தையும் கெடுத்து தூத்துக்குடியை மற்றொரு போபாலாக மாற்றி வருகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில்  உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் புற்றுநோய் உட்பட பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ போராடி வருகின்றனர்.

 

இந்நிலையில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. அனில் அகர்வால் என்ற கார்ப்பரேட் முதலாளிக்காக சொந்த மாநில மக்களை அடகு வைக்கும் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் கண்டிக்கத் தக்கது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஆலையை விரிவாக்கம் செய்ய அளித்த அனுமதியை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம். மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அங்கே நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.’’

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.