Skip to main content

மணப்பெண்ணின் ஆசையை மணமேடையில் நிறைவேற்றிய நண்பர்கள்

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

Friends who fulfilled the bride's wish on the wedding table!

 

ஜல்லிக்கட்டு காளையுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற மணப்பெண்ணின் ஆசையை மணமேடையில் நிறைவேற்றினர் நண்பர்கள். 

 

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகே உள்ள அணைக்கரைப்பட்டி பகுதியில் அழகுமுனி- கனகலட்சுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் மாடுபிடி வீரர் என்பதால் ஜல்லிக்கட்டு காளையுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என மணப்பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், மணமகனின் நண்பர்கள் ஜல்லிக்கட்டு காளையை அலங்கரித்து திருமணம் மேடைக்கு கொண்டு சென்றனர். பின்பு, ஜல்லிக்கட்டு காளையைப் பிடித்தவாறு மணமகள் தனது கணவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்