Skip to main content

காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு சரக்கு கடத்தல்!

Published on 26/10/2018 | Edited on 26/10/2018

திருவாரூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட புதுச்சோி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 2000 ஆயிரம் மதுபாட்டில்கள் வேனுடன்  பறிமுதல் செய்து  சம்மந்தப்பட்ட  இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

 

wine



திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விசுலூர் என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அசூர வேகத்தில் வந்த வேனை மறித்து சோதனை செய்த போது வேனில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.



காவல்துறையினர் பிடித்த வேனில் வந்தவர்கள் புதுச்சோி மாநிலம் காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டிணத்தை சோ்ந்த ரமணன்(30), காரைக்கால் நேரு நகரை சோ்ந்த சந்தான ராஜ்(34) இருவரும் என்பது தெரியவந்து, அவர்களை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றம் வேனிலிருந்த 2000
மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

 

wine

 

விசாரணையில் காரைக்காலில் இருந்து கும்பகோணத்திற்கு இந்த மதுபாட்டில்கள் கடத்தி செல்ல முயன்றதாக கூறியுள்ளனர்.



சமீபகாலமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து குறைந்த விலைக்கு தரமில்லாத மது பாட்டில்களை வாங்கி வந்து தமிழகத்தில் அதிகவிலைக்கு விற்பனையாகும் சம்பவம் அதிகரித்துள்ளது. நாகை மாவட்ட  எஸ்.பியின் அதிரடியால், தினசரி நான்கு வாகனங்களுக்கு குறைவில்லாமல் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பிடிபடுகின்றன, மாற்று வழியாக தற்போது திருவாரூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், என்கிறார்கள் போலீசார்.

சார்ந்த செய்திகள்

Next Story

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.

Next Story

காண வருவோருக்கு மது பாட்டில்; எம்எல்ஏவின் காணும் பொங்கல் அலப்பறை

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
A bottle of wine for visitors;  MLA gift to volunteers

தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாட்டங்கள் முடிந்திருக்கும் நிலையில் ஆந்திராவிலும் சில இடங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆந்திராவில் எம்எல்ஏ ஒருவர் காணும் பொங்கல் தினத்தன்று தன்னை காண வருவோருக்கு மது பாட்டிலும் உயிருடன் கோழியும் பரிசாக அளித்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ வாசுப்பள்ளி கணேஷ் என்பவர் காணும் பொங்கல் அன்று தன்னைக் காண வரும் தொண்டர்களுக்கு முழு மது பாட்டிலையும், உயிருடன் ஒரு கோழியையும் வழங்குவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்.எல்.ஏ வாசுபள்ளி கணேஷ் குமார் மீது ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது. தசரா பண்டிகையின்போது கட்சிக்காரர்களுக்கு சினிமா டிக்கெட், கோழிக்கறி, மதுபானம் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.  ஆந்திராவில் ஒரு நபர்  அதிகபட்சமாக மூன்று பாட்டில்களை சேமிக்க மட்டுமே அனுமதி உள்ள நிலையில் 400 மதுபாட்டில்களை சேமித்து விநியோகித்த எம்எல்ஏவின் செயல் குறித்து கலால் அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.