Skip to main content

“எவ்வளவு குனிந்து கேட்டாலும் நிதி ஒதுக்க மனமில்லை” - அமைச்சர் எ.வ. வேலு 

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Finance Minister does not have heart to allocate funds says eV Velu

வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே உரிமைகளை மீட்க ஸ்டாலினில் குரல் பரப்புரை கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ க்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வால் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மத்திய அரசு மாட்டுச் சாணியையும் கோமியத்தையும் ஆராய்ச்சி பண்ணுவதற்கு ரூ.500 கோடி ஒதுக்குகிறார்கள் அதேபோன்று சமஸ்கிருத மொழிக்கு ரூ.600 கோடி ஒதுக்குகிறார்கள். ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ.29 கோடி மட்டுமே ஒதுக்குகிறார்கள்

அதே போன்று மாநில அரசிடம் தான் வரி விதிக்க உரிமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்படாது என்றும், அதே போன்று பிரதமர் மோடி எங்கு சென்றாலும், தமிழ் வளர்ப்பதாக கூறி திருக்குறளைச் சொல்கிறார். ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ.29 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கிறார். இது எப்படி வளர்ச்சி ஆகும். 

மேலும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட தென் மாவட்டம் மக்களை சந்திக்க வந்த தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிதி ஒதுக்கும்படி குனிந்து குனிந்து கேட்டோம். ஆனால் அவர் நிதியே ஒதுக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன்களில் 14.56 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக தள்ளுபடி செய்தார்கள். ஆனால், அந்த நிதியை வைத்துத் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு இருக்கலாம். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் வைக்கிறது” என்று பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.