Skip to main content

கைப்பையில் இருந்த வெடிபொருள் குறிப்புகள்; ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பா? - சென்னையில் திடுக்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

Explosive notes in the handbag; Connection with -Shocked in Chennai

 

காவல்துறையின் வாகன சோதனையின் போது தப்பித்துச் சென்ற நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை, ராயபுரம் கல் மண்டபம் அருகே உள்ள பாலம் அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன விதிமீறல்கள் தொடர்பாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரே வாகனத்தில் மூன்று பேர் தலைக்கவசம் அணியாமல் வந்தனர். இதனைக் கண்ட போலீசார் அவர்களை மடக்க முயன்றனர். ஆனால் போலீசார் இருப்பதை சுதாரித்துக் கொண்ட அவர்கள் வாகனத்தை எதிர்புறமாக திருப்பிக் கொண்டு தப்பிக்க முயன்றனர்.

 

இதனால் சந்தேகமடைந்த போக்குவரத்து போலீசார் மற்றொரு வாகனத்தில் இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்றனர். இதில் பிடிபட்ட மூன்று பேரிடம் இருந்து கைப்பை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேரில் இருவர் 19 வயது உடையவர்கள். மூன்றாவது நபரின்  பெயர் முகமது மீரான் என்பதும், அவர் ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மூன்று பேரையும் ராயபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பையில் இருந்த பொருட்கள் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பான ஆவணங்கள் அந்த பையில் இருந்தது. அதோடு மட்டுமல்லாது வெடிபொருள் தயாரிப்பது எப்படி என்பது தொடர்பாக யூடியூப் டுடோரியல் வீடியோக்களைப் பார்த்து அது தொடர்பான வேதிப்பொருட்கள் மற்றும் குறிப்புகள் அந்த பையில் இருந்தது. உடனடியாக இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில், கலவரத்தைத் தூண்டுவது, நாட்டினுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் முகமது மீரான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நபருக்கும் குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் அவருடன் இருந்த இரண்டு இளைஞர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அண்மையில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) தமிழகத்தில் 45 இடங்களிலும், உளவுத்துறையின் சுற்றறிக்கையை அடுத்து சென்னை காவல்துறையினர் சென்னையில் நான்கு இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.