Skip to main content

முன்னாள் அமைச்சர் காமராஜுக்குச் சொந்தமான நிறுவனத்தில் சோதனை (படங்கள்) 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022


 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜ், கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 58.44 கோடி சொத்து சேர்த்ததாக  புகார் எழுந்தது. இது தொடர்பாக இன்று (08/07/2022) அதிகாலை முதல் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை, நீலாங்கரை பாண்டியன் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான ஆர்.கே. இன்டர்நேஷனல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்