Skip to main content

தமிழகம் வந்தடைந்த இன்ஜினியர்கள்... ஆங்காங்கே சிறப்பான வரவேற்பளித்த மக்கள்!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Engineers who arrived in Tamil Nadu

 

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சேர்ந்த சுபாஷ், விஜய் மற்றும் தமிழகத்தை சேர்ந்த முகமது ஷேக் ஆகிய மூவரும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பிரச்சார பயணத்தை டிசம்பர் 24ஆம் தேதி துவங்கினர். சமூக நல்லிணக்கம் மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ச்சியாக சைக்கிளில் மக்களை சந்தித்து ஆரோக்கியமான வாழ்வு, சமூக நல்லிணக்கத்தை பேணி காக்கவும், மது பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட மக்களிடம் பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளனர். 

 

டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய பயணம் காஷ்மீரிலிருந்து, குஜராத், இராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, பெங்களூர், ஆந்திரா வழியாக தற்போது தமிழகம் வந்துள்ளனர். இதுவரை 14 ஆயிரம் கிலோமீட்டர் 14 நாட்கள் தொடர்ச்சியாக சைக்கிள் பயணத்தின் இடையே ஆங்காங்கே ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் செய்த மூவருக்கும் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த வகையில் மதுரை வந்தபோது இவர்களில் ஒருவராகிய  ஷேக் சையதை சந்தித்தோம்.

 

சஃபச்ட்ஃப்

 

அப்போது அவர் பயணம் குறித்த கருத்துகளை நம்மிடம் பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது “நான் மதுரையை பூர்வீகமாக கொண்டவன் புனேவில் மென்பொருள் இன்ஜீனியராக பணிபுரிகிறேன். என்னுடன் பணிபுரிபவர்களோடு சேர்ந்து 75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது இருக்கும் இளைஞர்கள் மது போன்ற போதை பழக்கத்திலிருந்து விடுபடவும், உடல் ஆரோக்கியத்தை பேணவும், நாட்டில் சமூக நல்லிணக்கத்தை பேணிகாக்கவும் , உடல் ஆரோக்கியம் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி  வரை சைக்கிளில் சென்று மக்களை சந்திப்பது என்று முடிவெடுத்து செல்கிறோம். இன்று மதுரையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.