Skip to main content

துணி காயவைத்த கணவர் மீது பாய்ந்த மின்சாரம்; காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழப்பு

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Electric shock on husband drying clothes; The wife who went to save also lost her life

துணி காயவைத்த கணவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில்  கணவனைக் காப்பாற்ற சென்ற மனைவி மீதும் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது மேல்சிறுவளூர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் பைனான்ஸில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று தனது வீட்டில் வாசிங்மிஷினில் துவைத்த துணியை காயவைக்க சென்றுள்ளார். அங்கு இரும்பு கம்பியில் துணி எடுத்து போடும் போது ராமு மீது மின்சாரம் தாக்கி உள்ளது. அவர் கத்தியுள்ளார். இதனைப் பார்த்த ராமுவின் மனைவி சரளா, தனது கணவரை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதில் ராமு மற்றும் சரளா ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்களால் அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வடபொன்பரப்பி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி சம்பவம்; உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
nn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழப்பு 64 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் (40) என்பவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு  64 ஆக அதிகரித்துள்ளது.

Next Story

கள்ளச்சாராய வழக்கு குற்றவாளி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
illicit liquor case accused flees from police station

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் பகுதியில் சாராய வியாபாரியான மணிகண்டன் என்பவரை காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து வந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து மணிகண்டன் தப்பியுள்ளார். தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.