Skip to main content

அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Edappadi Palanisamy appeals to AIADMK!

 

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் நாளை (23/06/2022) காலை முதல் மாலை வரை பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளஅறிக்கையில், "நாளை (23/06/2022) நடைபெறவுள்ள கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரவுள்ள அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அன்பான் வேண்டுகோள், 

 

பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரவுள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் பத்திரமாக பயணித்து, கூட்ட அரங்கிற்கு வருகை தந்து, கூட்டத்தைச் சிறப்பித்தது, அவரவர் இல்லங்களுக்கு பத்திரமாக திரும்ப வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்