Skip to main content

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் - மு.க.ஸ்டாலின் 

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
dmk



கொடநாடு கொலை – கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

கொடநாடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், இதில் சம்பந்தப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டுமென வலியுறுத்தியும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று (24-01-2019) சென்னை மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். 

 

dmk


அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் மு.க.ஸ்டாலின், 
 

கொடநாடா? கொலை நாடா? என்ற நிலையில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘ஒரு கொலைக் குற்றவாளி’ என்பதை ஆதாரங்களோடு சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது என்பது நாட்டிற்கு நன்றாகத் தெரியும். 
 

எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கையை தமிழக ஆளுநர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்கள் ஏற்கனவே, அவரிடத்தில் நேரடியாகச் சென்று 4 முக்கியமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து அவரிடத்தில் ஒரு புகார் மனுவைத் தந்திருக்கின்றோம். 
 

அந்த நான்கு புகார்களில் ஒன்று இந்த கொலைக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்களை உடனடியாக முதலமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் இறக்கிட வேண்டும். அப்பொழுது தான், உண்மையான முறையான ஒரு விசாரணை நடைபெற முடியும். 

 

dmk


அடுத்து இரண்டாவதாக கவர்னர் அவர்கள் உடனடியாக இந்திய நாட்டினுடைய ஜனாதிபதியிடத்தில் நேரடியாகச் சென்று இதுகுறித்து விளக்கிச் சொல்லி அவர் மூலமாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

மூன்றாவதாக உயர் நீதிமன்றத்தினுடைய நீதிபதி மேற்பார்வையில் ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும். 
 

அடுத்து நான்காவதாக, மர்மமான முறையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படக்கூடிய டிரைவர் கனகராஜ் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர், எனவே, அவருடைய மர்ம மரணம் குறித்தும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், நான்கு முக்கியமான பிரச்னைகளை திராவிட கழகத்தின் சார்பில் நாங்கள் கவர்னரிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம். 

 

dmk


ஆனால், இதுவரையில் அவர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என்ற செய்திகள் வரவில்லை. எனவே, அதை வலியுறுத்தக்கூடிய வகையில், வற்புறுத்தக்கூடியச் சூழ்நிலையில் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகங்களின் சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியிருக்கின்றது. 


தி.மு.கழகத்தினுடைய தலைவராக இருக்கக்கூடிய என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், கழகத்தினுடைய செயல்வீரர்கள், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் அத்துனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

 

செய்தியாளர்: ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உச்ச நீதிமன்றம் இப்பொழுது உத்தரவிட்டுள்ளது. அது பற்றி உங்களின் கருத்து?
 

மு.க.ஸ்டாலின்: உலக முதலீட்டாளர் மாநாடு என்ற ஒரு போலி மாநாட்டை நடத்திருக்கொண்டிருக்கும், எடப்பாடி பழனிசாமியிடம் சென்று இந்தச் செய்தியை சொல்லுங்கள். அவர் என்ன பதில் சொல்லுகின்றார் என்று கேட்டுவிட்டு அதனை மக்களிடத்தில் சொல்லுங்கள்.
 

செய்தியாளர்: மக்கள் விரோதப்போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டத்தை பொதுமக்கள் மேற்கொள்கிற சூழ்நிலை இருக்கின்றது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர்கள் மீது கவர்னரிடம் அனைத்துப் புகார்களும் கொடுக்கப்படுகின்றது. கவர்னர் அனைத்துப் புகார்களையும் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றாரா?
 

மு.க.ஸ்டாலின்: மத்திய அரசு பின்னால் இருந்துகொண்டு இவர்களுக்கு முழு அளவிற்கு ஆதரவு தந்துகொண்டு இருக்கின்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இருந்தாலும், இதை நாங்கள் விடப்போவதில்லை, தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும்.
 

இவ்வாறு அவர் பேசினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.