Skip to main content

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மருத்துவர்களால் பாலியல் தொல்லையா? -  தற்கொலை முயற்சியால் பரபரப்பு

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

 

thiru1

 

திருவாரூரில் மாற்றுதிறனாளி பெண்ணுக்கு மருத்துவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி சரிந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய சந்தபேட்டை காமராஜ் தெருவை சோ்ந்தவர் மாற்றுதிறனாளியான தெட்சாணமூர்த்தி.  இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்பூலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே போன்று அவரது மனைவி சித்ராவும் மாற்றுத் திறனாளியாக இருக்கிறார். அவர் திருத்துறைப்பூண்டி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு மருத்துவ பணியாளராக பணியாற்றி வருகிறார். அங்கு இவருக்கு சில மருத்துவர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அதற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

 

THIRUCHI SHIVA

 

இதனால் அந்த மருத்துவர்கள் சித்ராவின் ஊனம் என்பது பொய்யானது என்றும் அவரை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்றும் புகார்  தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே போல் சித்ரா கணவர் தெட்சாணமூர்த்தியின் ஊனம் குறித்து பரிசோதிக்க வேண்டும் என்றும் புகார் கூறியதால் அவர்களை பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சில மருத்துவர்கள் சித்ராவை அத்துமீறி சோதனை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சித்ராவும், அவரது கணவரும் இத்தனை அவமானத்திற்கு பிறகும் வாழ வேண்டுமா என முடிவெடுத்து தூக்க மாத்திரை தின்றுவிட்டு தங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது என மனுவை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

 

அங்கு மயங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இருந்த தம்பதியரை காவல்துறையினர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.   அங்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.