Skip to main content

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தை தூர்வார மறந்த அதிகாரிகள்...

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு, சிறுமலை அடிவாரத்தில் கடந்த 2010ம் வருடம் தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராக ஐ.பெரியசாமியின் சீரிய முயற்சியால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் 6 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராமக்கால் மற்றும் ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தை திறந்துவைத்தார். சுமார் ரூபாய் 6 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த இந்த நீர்த்தேக்கம் மூலம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள விவசாயிகள் பயனடைந்து வந்தனர். 

dmk party  Officials who have forgotten the reservoir dindigul district farmers


இந்த நீர்த்தேக்கம் சிறுமலை அடிவாரப் பகுதியிலுள்ள வெள்ளோடு, செட்டியபட்டி, சிறுநாயக்கன்பட்டி, வேளாங்கண்ணிபுரம் உட்பட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வந்தது. கடந்த 9 வருடங்களாக இந்த நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர்வரத்து பாதைகளை ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்து நீர்வரத்து பாதைகளை அடைத்துவிட்டதால் தற்போது தொடர்ந்து பருவமழை பெய்தும் முறையாக மழைநீர் நீர்த்தேக்கத்திற்கு வரவில்லை. இதனால் நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுகிறது. மேலும் புல்செடிகள் புதர் போல் மண்டி காணப்படுகின்றன. 

dmk party  Officials who have forgotten the reservoir dindigul district farmers


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரிய மாவட்ட நிர்வாகம் வெள்ளோடு ராமக்கால் ஆணைவிழுந்தான் ஓடையை மட்டும் தூர்வாராமல் விட்டுவிட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் வராத குளம் பொதுமக்களுக்கு பயன்படாத குட்டை, விவசாயிகளுக்கு பயன்படாத குளத்தை கோடிக்கணக்கில் செலவு செய்த மாவட்ட நிர்வாகம் இந்த நீர்த்தேக்கத்திற்கும் நிதியை ஒதுக்கி இருக்கிறதா? என்று தெரியவில்லை. 

dmk party  Officials who have forgotten the reservoir dindigul district farmers


விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய இந்த நீர்த்தேக்கம் அரசியல் காரணமாக தூர்வாரப்படவில்லை. காரணம் தி.மு.க. ஆட்சியில் ஐ.பெரியசாமி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் என்பதுதான் காரணமா? என்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ராமக்கல் ஆணைவிழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தை தூர்வாராவிட்டால் ஒரு ஓட்டு கூட நாங்கள் போடமாட்டோம் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.