Skip to main content

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்! (படங்கள்) 

Published on 05/01/2022 | Edited on 05/01/2022


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர், இன்று (05/01/2022) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. 

 

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (05/01/2022) மாலை 06.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 

 

இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன்,  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

இக்கூட்டத்தில், சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் செயல்பாடுகள், உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன. 

 

சார்ந்த செய்திகள்