Skip to main content

நிதி கேட்கும் மக்கள் நீதி மய்யம்!!

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

mnm

 

மக்கள் நீதி மையத்திற்கு  நிதி வழங்கிடுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தன் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

 

இன்று காலை சென்னை மற்றும் பொள்ளாச்சி மக்கள் நீதி மய்ய தலைமை அலுவகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுக்களை பெறலாம்.

 

 

வரும் 28 ஆம் தேதி முதல் மார்ச் 7 வரை இந்த  விருப்பமனுவை பெறலாம் எனவும் விருப்ப மனுவை பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 10000 செலுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனுவை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் 

 

 

புதிய தமிழ்நாட்டினை கட்டமைத்திட, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி வழங்கிடுவீர்.

 

இது நமது நிதி..!, நமக்கான நிதி.!!!

 

http://www.maiam.com என்கின்ற இணையதள முகவரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி வழங்கிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்