Skip to main content

“எதுவும் செய்ய முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது” - சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

"The DMK government is being forced to do nothing" -CV Shanmugam

 

விழுப்புரம் மாவட்டம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான அரசின் சட்ட மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை கவர்னர் திருப்பி அனுப்பியதை மீண்டும் அவருக்கு அப்படியே திருப்பி அனுப்ப தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் நீட் தேர்வு குறித்து கவர்னர் எழுப்பி உள்ள சந்தேகங்களில் திருத்தம் செய்து அதை அவருக்கு மீண்டும் அனுப்பலாம். அவர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு முரண்பாடாக சட்ட மசோதா உள்ளதாக கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு அப்போது ஜனாதிபதிக்கு அனுப்பிய சட்ட மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பி உள்ளார். அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டார். இன்று கவர்னர் கூறியது போன்று அன்றைக்கு ஜனாதிபதி எந்த காரணமும் கூறவில்லை.

 

அப்போது ஏதாவது காரணங்கள் கூறி இருந்தால் அதை ஆராய்ந்து மீண்டும் சட்ட மசோதாவை சரிசெய்து அவருக்கு திருப்பி அனுப்புவோம் என்று பதிலளித்தோம். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. திமுக ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எங்களிடம் திட்டம் இருக்கிறது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒரே கையெழுத்து மூலம் நீக்குவோம். அப்போது சட்டமன்றத்திலும் தேர்தல் வாக்குறுதிகளும் கூறினீர்கள். அதன் அடிப்படையில் தற்போது ஒரு மசோதாவை கொண்டு வந்து கவர்னருக்கு அனுப்பி உள்ளீர்கள். அப்படி தாங்கள் இயற்றிய மசோதாவிற்கும், நாங்கள் இயற்றிய மசோதாவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது. நீங்கள் குழு அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறியுள்ளீர்கள்.

 

அதுமட்டும் தான் வித்தியாசம் மற்றபடி நாங்கள் கூறிய காரணங்களை தான் நீங்கள் மசோதாவை இயற்றி அனுப்பி உள்ளீர்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகம் மட்டும் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு நடத்தி வருகிறது. இதில் சரியான முடிவு எடுக்க தெரியாமல் திமுக மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றி அரசியல் செய்யக்கூடாது. 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் கடந்த ஆண்டு அரசுப்பள்ளியில் படித்த  436 மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 537 மாணவ மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

 

இன்று நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போகிறோம் என்று கூறி முதல்வர் ஸ்டாலின் நடிக்கிறார். கவர்னர் ஒப்புதல் இல்லாமலேயே நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டமாக கொண்டு வந்துள்ளார். ஆட்சியிலும் அதிகாரத்திலும் 39 எம்பிக்களை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் மக்களை ஏமாற்றாமல் மாணவ மாணவிகளை குழப்பாமல் நீட் தேர்வில் விலக்கு பெற சட்டப்பூர்வமான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் காட்டமாக பேசினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.