Published on 30/06/2020 | Edited on 30/06/2020

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,393 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 90,167 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது.