Skip to main content

30 ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்ட கோரிக்கை... கூட்டத்தொடர் அறிவிப்பை எதிர்நோக்கி பொதுமக்கள்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

30 years ago, the demand put forward ... the public in anticipation of the announcement of the meeting

 

தமிழ்நாட்டில் சிலைகளால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கருதி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தலைவர்கள் சிலைகளுக்கு இரும்பு கம்பியால் கூண்டு அமைக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் அதே நடைமுறையில்தான் இன்றும் உள்ளது. மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டுக்காகவும், மொழிக்காகவும் பாடுபட்ட தலைவர்களுக்குப் புதியதாக சிலை வைக்கும் நடைமுறை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப். 7ஆம் தேதி நடைபெற்ற செய்தித்துறை மானியக் கோரிக்கையில் நாட்டின் சமூகநீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள், விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், ஆகியோரைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், விடுதலை போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளுக்கு கடலூரிலும், பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தத்திற்கு மயிலாடுதுறையிலும், முத்துலட்மி அம்மையாருக்கு புதுக்கோட்டையிலும், ராணிபேட்டையில் தமிழறிஞர் வரதராசனார் உள்ளிட்ட 11 பேருக்கு சிலைகள் நிறுவப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது 14 கிலோமீட்டர் நீளமுள்ள உலகிலேயே மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியான வீரநாரயணன் (வீராணம்) ஏரி. சாதாரணமாக செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு வீராணம் ஏரி கி.மு 907 - 955 ஆண்டு முதலாம்  சோழா்கள் காலத்தில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஏரியின் கட்டுமானப் பணியில் பழங்குடியினரே முழுவதும் ஈடுபட்டு கட்டியுள்ளனர். இந்த ஏரியைக் கட்டிய பெருமை அவர்களையே சாறும் என்றும் கூறப்படுகிறது. ராஜாதித்ய சோழனால் உருவாக்கப்பட்டது. பின்னர் அவர் தனது தந்தை பராந்தக சோழன் பெயரைப் சூட்டிக்கொண்டார். இந்த ஏரி தஞ்சை மாவட்டம்  கீழணையில் இருந்து வடவார் வாய்காலின் வழியாக தண்ணீரை பெற்று, வீராணம் ஏரியில் சேமிக்கப்பட்டு, பாசனத்திற்கும் சென்னையின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏரியின் முழுகொள்ளவு 47.50 அடியாகும்.

 

30 years ago, the demand put forward ... the public in anticipation of the announcement of the meeting

 

இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி வட்டத்திற்கு உட்பட்ட டெல்டா பகுதியான 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த ஏரி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பராந்தக சோழன் கட்டியுள்ளார். இப்படி பெருமை மிக்க ஏரியைக் கட்டிய அவருக்கு வீராணம் ஏரியில் சிலை வைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறார்கள். கடந்த மாதம் வீராணம் ஏரியில் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோரை கடலூர் மாவட்ட இயற்கை வேளாண் பெண் விவசாயியும், வீராணம் ஏரியின் ராதா வாய்கால் பாசன சங்கத் தலைவருமான ராதாவாய்கால் ரங்கநாயகி சந்தித்து கோரிக்கை விடுத்தார்.  இதேபோல் மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகள் வீராணம் ஏரியைக் கட்டிய பராந்தக சோழனுக்கு மணிமண்டபத்துடன் கூடிய சிலை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பொதுப்பணித்துறையினருக்கு மனு அளித்துவருகிறார்கள்.

 

மேலும், தற்போதைய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் வீராணம் ஏரியை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்றும் பேசியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி சட்டமன்றத்தில் பேசியுள்ளார். எனவே தமிழ்நாடு அரசு வீராணம் ஏரியை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக மாற்றி, வீராணம் ஏரியைக் கட்டிய பரந்தக சோழனுக்கு மணிமண்டபத்துடன் கூடிய சிலையை வைக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தொடரிலே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.