Skip to main content

''மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையால் தாமதமாகும் சிகிச்சை''-போதிய பணியாளர்களை நியமிக்க அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை!

Published on 11/05/2021 | Edited on 12/05/2021

 

'' Delays in treatment due to shortage of medical staff '' - Minister Meyyanathan's request to appoint enough staff!

 

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து உயிர்பலிகளும் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்று மூச்சுத்திணறலோடு வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பும் அவலநிலையும் தொடங்கியுள்ளது.

 

நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு தஞ்சை மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காததால் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தும் பலனில்லை. அதேபோல நேற்று புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற இளைஞருக்கு கோவையில் வேலை செய்த இடத்தில் கரோனா பெருந் தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கோவை மருத்துவமனைகளில் படுக்கையின்றி ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வந்து சிகிச்சை தொடங்கிய நிலையில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

 

இப்படி பலரும் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் விரைந்து மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

 

'' Delays in treatment due to shortage of medical staff '' - Minister Meyyanathan's request to appoint enough staff!

 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ''புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவு கரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி வருவதால் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே கீழ்கண்டவாறு பணியாளர்களை விரைந்து நியமிக்க கேட்டுக்கொள்கிறேன்.

 

அதாவது மெடிக்கல் ஆஃபிசர் 50, செவிலியர்கள் 100, லேப் டெக்னீசியன் 20, டேட்டா என்டரி ஆபரேட்டர் 10, மேலும் டெக்னீசியன்கள், இதர பணியாளர்கள் 60 வரை நியமனம் செய்ய வேண்டும்'' எனக் கேட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.