Skip to main content

தீபத்திருவிழா - ருக்கு இல்லாத விழா;கலங்கும் பக்தர்கள்!!

Published on 14/11/2018 | Edited on 14/11/2018

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இன்று ( 14.11.2018 ) ந்தேதி விடியற்காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். கொடியேற்ற தினத்தன்றே காவல்துறை தங்களது கெடுபிடியை தொடங்கியது, கோயிலுக்கு வந்த பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் இன்று காலையும், இரவும் சுவாமி அலங்கார வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்தன. கடந்த ஆண்டு வரை சுவாமி வீதியுலா வரும்போது சுவாமிகளுக்கு முன்பு ருக்கு என்கிற கோயில் யானை ஆடி அசைந்து மாடவீதியில் வரும். இந்த யானைக்கு உணவு வழங்க பலர் முண்டியடிப்பர், குழந்தைகளுக்கு அதனை காட்டி மகிழ்வர் பெற்றோர்.

 

thiruvanamalai


சில மாதங்களுக்கு முன்பு ருக்கு யானை கோயில் மதில் சுவற்றில் முட்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மரணத்தை தழுவியது. நாய்கள் துரத்தியதால் பயந்துப்போய் ஓடும்போது சுவற்றிலும், இரும்பு கம்பியிலும் மோதி இறந்துவிட்டது என்றார்கள் கோயில் அதிகாரிகளும், ஊழியர்களும்.


யானை, நாய்களுக்கெல்லாம் பயப்படும்மா என சர்ச்சை எழுந்தது. ஆனால், அதற்கு யாரும் சரியான பதில் சொல்லாமல் யானை ருக்குவை புதைத்ததை போல உண்மையையும் சேர்த்து புதைத்துவிட்டனர்.

 

thiruvanamalai


இந்நிலையில் இறந்த யானைக்கு பதிலாக புதிய யானை வாங்கி கோயிலில் வைத்து பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலதரப்பிலும் இருந்து எழுந்தது. இதுவரை இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. அறநிலையத்துறையும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டு தொடங்கியுள்ள கார்த்திகை தீபத்திருவிழாவில் ருக்கு யானை இல்லாமல் திருவிழா நடப்பதால் பலரும் ருக்குவை நினைத்து கண்ணீர் வடிப்பதோடு, மாடவீதியில் ருக்குவை பற்றி ஏக்கத்துடன் பேசி செல்கின்றனர்.


தென்னிந்தியாவில் பிரபலமான அண்ணாமலையார் கோயிலுக்கு விரைவில் யானையை வாங்கி கோயிலில் வைத்து பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்பிலும்மிருந்து எழுகிறது. செய்யும்மா அறநிலையத்துறை ?.

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.