Skip to main content

"கரோனா எதிரொலியாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர்த்து மற்ற அனைவருக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்"- த.மா.கா யுவராஜ் பேட்டி!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

கடலூர் மத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் மத்திய மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியிட்டவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

cuddalore tamil maanila congress meeting yuvraj press meet

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில். "கரோனா வைரஸ் சம்மந்தமாக நாடு முழுவதும் பெரும் பதட்டமும், அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தியாவில் கடந்த 20 நாட்களாக 102 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அரசு கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக எடுத்து வருகிறது. ஆனால் முகக் கவசம் 50 பைசாவிற்கு விற்றது. ஆனால் இன்று ரூ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே முகக்கவசம் மற்றும் கை அலம்பும் சோப்புகள் ரேஷன் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் வழங்க வேண்டும். கரோனா வைரஸ் ரத்தப்பரிசோதனை நிலையங்களை மாவட்ட அளவில் துவங்க வேண்டும்.


வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறைகளை அறிவிக்க வேண்டும். கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைவு பயனை மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். அதேபோல் கைபேசிக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி தான் இருக்கிறது.  


இந்தியா முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் பின்னணியில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் கூறுவது எதுவும் நடக்காது." இவ்வாறு யுவராஜ் கூறினார். கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகி அருணேஸ்வரன், வேல்முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட நிர்வாகி ராஜா சம்பத், குமராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலா உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.