Skip to main content

''நீதிமன்றமே சொல்லிவிட்டது கள்ளக்காதல் தவறில்லை'' கணவன் வாக்குவாதத்தால் மனைவி தற்கொலை!!

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

கள்ளகாதல் தவறில்லை என நீதிமன்றமே கூறியுள்ளதாக கணவன் மனைவியிடம் வாக்குவாதம் நடத்தியதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

 

"The court has told me that there is no wrongdoing"; Wife commits suicide

 

சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர் ஜான்பால் பிராங்க்ளின்-புஷ்பலதா தம்பதியினர். ஜான்பால் அதேபகுதியிலுள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். 2016-ஆம் ஆண்டு புஷ்பலதாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜான்பால் தற்போது தான் பணிசெய்யும் இடத்தில் ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். இந்த விஷயம் மனைவி புஷ்பாவுக்கு தெரியவர இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. 

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதேபோல் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியதற்காக மீண்டும் இருவருக்கு இடையே சண்டை முற்றியது. அப்போது நீதிமன்றமே கள்ளக்காதல் தவறில்லை என கூறியுள்ளதாக மனைவியுடன் ஜான்பால் வாக்குவாதம் நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் மனமுடைந்த புஷ்பலதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

நாடக மேடையில் வெட்டி வைக்கப்பட்ட தலை; பரபரப்பில் திருமங்கலம்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Love Affair; There is excitement in Thirumangalam

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமணத்திற்குப் பிறகும் பெண் தன்னுடைய காதலை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரன், சகோதரியையும் அவருடைய காதலனையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). கட்டடங்களில் கம்பி கட்டும் வேலையைப் பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை என்பவருடைய மகள் மகாலட்சுமி என்பவரை சதீஷ்குமார் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகாலட்சுமிக்கு வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் ஆன ஒரே வாரத்திலேயே மகாலட்சுமிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டிற்கே வந்துவிட்டார். இந்த நிலையில், தாய் வீட்டிற்கு வந்த மகாலட்சுமி தன்னுடைய முன்னாள் காதலன் சதீஷ்குமாரோடு செல்போனில் பேசி வந்துள்ளார்.

இது மகாலட்சுமியின் தம்பி பிரவீன் குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இருவரையும் கூப்பிட்டு கண்டித்த நிலையிலும் மீண்டும் அவர்களுடைய காதல் தொடர்ந்தால், ஆத்திரம் அடைந்த பிரவீன் குமார் இரவில் நடந்து வந்து கொண்டிருந்த சதீஷின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி தலையை வெட்டித் துண்டித்துள்ளார். தலையை அந்த ஊரின் மையப் பகுதியில் உள்ள கலையரங்க நாடக மேடையின் மீது வைத்துவிட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வீட்டிற்குச் சென்று சகோதரி மகாலட்சுமியின் கழுத்தையும் அறுத்துக் கொலை செய்திருக்கிறார். தடுக்க வந்தவர்கள் கையையும் வெட்டியுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மதுரை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருமங்கலம் சரக டிஎஸ்பி ஆகிய பலரும் விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் கொடூரக் கொலையை நிகழ்த்திய பிரவீன் குமாரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது பிரவீன் குமார் சரணடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.