Skip to main content

கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பிய 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே கோட்டைமேட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 3 வாலிபர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.  
 

k

 

சென்னை கண்ணகி நகரைச்சேர்ந்த பிரசாந்த், சீனிவாசன், சுமன் ஆகிய 3 வாலிபர்கள் கொலை வழக்கு ஒன்றில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, ஆட்டோவில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது  மர்ம நபர்கள் அவர்களை வெட்டியுள்ளனர்.  படுகாய ங்களுடன் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்