Skip to main content

கரோனா தடுப்பு நடவடிக்கை - தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

சீனாவில் வுஹான் மாகணத்தில் முதலில் பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ், இன்று 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

 

 Corona Virus - TNgovt - Corona virus

 

 

இதில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இந்நிலையில் சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து, கரோனா தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்புவிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு பணிகளில் ஆர்வமுள்ள தனி நபர்களும் பங்கேற்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.    
 

சார்ந்த செய்திகள்