Skip to main content

அனைவருக்கும் கரோனா நிவாரணம் கேட்டு சேத்துபட்டில் வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

 

கரோனா   பேரிடர் காலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவதிய பொருட்களை ரேசன் கடைகளில் டிசம்பர் வரை விநியோகம் செய்யவேண்டும், குடும்பத்திற்கு ரூ 7,500 ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று (ஆக28) சேத்துபட்டு நேருபூங்கா அருகில் கே மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மாநில துணைத்தலைவர் கே.எஸ். கார்த்திஷ் குமார், மாவட்ட செயலாளர்  மஞ்சுளா, மாவட்ட துணைத்தலைவர்  பார்த்திபன், செயற்குழு உறுப்பினர்  யூஜின் பார்க் ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்