Published on 24/05/2020 | Edited on 24/05/2020

சென்னையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுது சென்னையில் 15 மண்டலங்களில் நான்கு மண்டலங்களில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி சென்னையில் ராயபுரம் மண்டலம் கரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 121 பேருக்கு கரோனா உறுதியானதால் அங்கு கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,889 ஆக உள்ளது. அதேபோல் சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,391 பேருக்கும், திருவிக நகரில்1,133 பேருக்கும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.