Skip to main content

தமிழ்நாட்டில் மீண்டும் குறைய தொடங்கிய கரோனா!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021
ர

 

தமிழகத்தில் இன்று 1957 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 200க்கும் குறைவான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 25,63,544 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 2,068 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,09,808 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,130 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,45,321 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 3,77,50,115 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது சிகிச்சையில் தமிழகம் முழுவதும் 20,385 பேர் உள்ளனர். இரண்டு நாட்களாக சிறிய அளவில் உயர்ந்து வந்த கரோனா தொற்று இன்று மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்