Skip to main content

காஞ்சி சங்கராச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றியது ஆகமவிதி மீறல்?!

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவிலில் கடந்த 9-ந்தேதி 48 பரிவார மூர்த்திகள் மற்றும் உப சன்னதி விமானங்களுக்கு முதல் கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் பிரசன்ன விநாயகர் சன்னதி விமானங்களுக்கும், ராஜகோபுரம் உள்பட 9 கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மூலவர் சன்னதி விமான கலசங்களில் காஞ்சி சங்கராச்சாரியார் புனித நீர் ஊற்றினார். உடன் தமிழக கவர்னரும் கலந்து கொண்டார். 

 

Consecration of Kanchi Sankaracharya  put holy water is Violation of the law

 

மூலவர் ஜம்புகேஸ்வரர் சன்னதி விமானத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவருடன் அர்ச்சகர்கள் கடங்களை சுமந்து வந்தனர். அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின.

 

சிவனடியார்கள் சங்கு ஊதி ஒலி எழுப்பினார்கள். அப்போது தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித், தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் வந்தனர்.

 

இதனை தொடர்ந்து காலை 6.40 மணிக்கு சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜம்புகேஸ்வரர் சன்னதி விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றினார். பின்னர் தீபாராதனை செய்து பக்தர்களை நோக்கி காட்டினார்.

 

Consecration of Kanchi Sankaracharya  put holy water is Violation of the law

 

அவரது அருகில் நின்று கொண்டிருந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீது மாவிலைகளால் புனித நீரை தெளித்தார்.

 

பின்னர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தார்.

 

அதன் பின்னர் சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அகிலாண்டேஸ்வரி சன்னதிக்கு வந்தார். சன்னதி விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் அப்போது அருகில் நின்று கொண்டிருந்தார். தீபாராதனை காட்டியபோது கவர்னர் உள்பட முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்தனர். கோவிலின் மேல் பகுதியிலும், பிரகார வீதிகளிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் நின்று கொண்டிருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

தற்பொது காஞ்சி சங்கராச்சாரியர் குடமுழுக்கு செய்து தண்ணீர் ஊற்றியது சர்ச்சையாகியிருக்கிறது. இந்த மாதிரி குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு திருமணம் ஆகாத சன்னியாசி செய்ய கூடாது என்பது ஐதீகமாம். 

 

ஏற்கனவே ஸ்ரீரங்கம் கோவிலில் ஆணையராக இருந்த ஜெயராமன் என்பவர் தன்னுடைய முகநூலில் ஆலயத்தின் அர்ச்சகருக்கு பதிலாக காஞ்சிமடம் கும்பத்தில் தண்ணீர் ஊற்றியது சரியா ? சர்வாகமும், ஆகமங்களும், புனிதநீரை ஊற்ற விஜெயந்திரரை எப்படி அனுமதிக்கலாம். 

 

Consecration of Kanchi Sankaracharya  put holy water is Violation of the law

 

அதே போல் கவர்னர் எப்படி அருகே சென்று நிற்கலாம் அவருடைய காவலர்கள் உள்ளே நின்று புனிதத்தை கலங்கப்படுத்தி விட்டார்கள் என திருவானைக்கோவில் மூத்த அர்ச்சகர்களும் வேதனைப்படுகிறார்கள். இது முற்றிலும் விதிமீறிய செயல் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கோவிலின் விதிகளை மீறலாமா இது தெய்வம் குத்தம் தான் என்று தற்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

ஏற்கனவே அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றின் பாலத்தின் இரண்டு பக்கம் அரசியல்வாதிகளை மிஞ்சிய அளவிற்கு பெரிய பெரிய கட்டவுட்கள் வைத்து எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தார். தெய்வத்தன்மையுடையவர் என்று பேசப்படும் காஞ்சி சங்கராச்சாரியர் இப்படி பொதுமக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு இப்படி பண்ணலாமா என்கிற கேள்வி பக்தர்களிடையே எழுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டிய விதி இல்லை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்  

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

There is no rule to stand up when Tamiltai greetings are played - Judge GR Swaminathan

 

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டிய விதி இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டபோது காஞ்சி மட இளைய பீடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரம், தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செய்ததையும் சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியினர் விஜயேந்திரின் இந்த செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

There is no rule to stand up when Tamiltai greetings are played - Judge GR Swaminathan

 

இதுதொடர்பாக ராமேஸ்வரம் காஞ்சி மட மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்க பாடல்;அது தேசிய கீத பாடல் அல்ல. எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி இல்லை. தமிழ் மீதுகொண்ட அதீதப்பற்று மற்றும் மரியாதை காரணமாகவே எழுந்து நிற்கிறோம்” என தெரிவித்து ராமேஸ்வரம் காவல்துறையினர் பதிவுசெய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

 

Next Story

பா.ஜ.க. கிளையாகும் சங்கரமடம்!

Published on 05/03/2018 | Edited on 06/03/2018
"தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., ஜெயேந்திரர் மறைவுக்குப் பிறகு சங்கரமடத்தை ஒரு கிளை அலுவலகமாகவே மாற்ற முடிவுசெய்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது' என்கிறார்கள் மடத்து விசுவாசிகள். ஜெயேந்திரரும் சுப்பிரமணிய சுவாமியும் நெருக்கமான நண்பர்கள். சு.சுவாமியை ஜெ.வுக்குப் பிடி... Read Full Article / மேலும் படிக்க,