Skip to main content

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
g

 

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் எட்டு மாதங்களாக பல கட்டங்களாக தளர்த்தப்பட்டு வருகிறது. பல மாதங்களாக மூடப்பட்டுள்ள கல்லூரிகள் திறப்பதற்கான அறிவிப்புகள் கடந்த சில வாரங்களுகளுக்கு முன் வெளியானது.

 

அதன்படி, இறுதியாண்டிற்கான வகுப்புகள் மட்டும் இன்று மீண்டும் துவங்கப்பட இருக்கிறது. மாணவ மாணவிகள் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கல்லூரிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கல்லூரிகளில் உடல் வெப்பநிலை சோதனை உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்