Skip to main content

வி.ஏ.ஓ-க்களின் தொடர் போராட்டம்; உத்தரவை நிறுத்தி வைத்த ஆட்சியர்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Collector suspended the order due to communication of the vao Officers

விழுப்புரம் வட்டம் கல்பட்டு, வடவாம்பலம் ஆனங்கூர், பள்ளி நெடியனூர் ஆகிய ஊர்களில் பணி செய்து வந்த கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் கோட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களை திடீர் எனப் பணியிட மாறுதல் செய்ததைக் கண்டித்தும் அதை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த ஐந்தாம் தேதி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் 6 மற்றும் 7 ஆம் தேதிகள் எனத் தொடர்ந்தது. போராட்டத்திற்கு ஆதரவாக கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆதரவளித்து அவர்களும் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றனர். மூன்று நாட்களாகப் போராட்டத்தை தொடர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், நேற்று மாலை கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். பிறகு ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். சங்கப் பிரதிநிதிகளை மாலை ஆறு மணிக்கு மாவட்ட ஆட்சியர் பழனி அவரது அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரவு எட்டு முப்பது மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக இடமாறுதல் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை அதே இடத்தில் மீண்டும் பணி செய்வதற்கு அனுமதித்தும் பணி மாறுதலை நிறுத்தி வைக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று நாட்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

லஞ்ச வழக்கில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Village administration officer arrested in bribery case

திருச்சி அருகேயுள்ள முசிறியில் லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தை நாடினார். பட்டா பெயர் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியர் தங்கவேல், ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், 27.12.2023 அன்று அவரிடம் லஞ்சப் பணம் கொடுத்தபோது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டாட்சியர் தங்கவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவானதைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில், விஜயசேகரை வியாழக்கிழமை(21.3.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.