Skip to main content

“இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை” - அமைச்சர் சக்கரபாணி  

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

cm stalin who brought the breakfast program for students

 

ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த விழாவுக்கு நகர் மன்றத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார்

 

இதில் அமைச்சர் சக்கர பாணி பேசும்போது. “தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக, மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் 37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து விலையில்லா மிதிவண்டிகள், நோட்டு புத்தகம், கட்டணமில்லாப் பேருந்து, காலைச் சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார். கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 13 லட்சம் மக்களுக்கு வேலை  வாய்ப்பினை வழங்கியுள்ளார். 

 

அதுபோல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த பள்ளியில், தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆகஸ்ட் 25ல் முதல்வர் தொடங்கிவைக்க உள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறவில்லை ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரப்படுகிறது. மாவட்ட ஊராட்சித்துறை தலைவர் நிதியிலிருந்து கே. ஆர். அரசுப் பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலா 7 லட்சம் மதிப்பில் ஆர்.ஓ.வாட்டர் பிளான்ட் அமைக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

 

இதில் பழநி ஆர்டிஓ சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன், தாசில்தார் முத்துசாமி, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்ராஜ் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.