Skip to main content

கோவையின் 100 வார்டுகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு 

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் துப்புரவுப் பணியாளர்களின் அரசுப் பணி நியமனத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக கூலிக்கு வேலை செய்து கொண்டிருக்கும் எங்களுக்கு அரசுப் பணி தராமல் அதிமுகவினருக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு வேலை கொடுத்து இருக்கிறார்கள். எனவே அந்தப் பணி நியமனத்தை ரத்து செய்து எங்களுக்கு வேலை தரவேண்டும்.

அது வரை நாங்கள் துப்புரவுப் பணி செய்ய செல்ல மாட்டோம்  என இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த மாநகராட்சி துப்புரவுப் பணியாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்