Skip to main content

முதல்வர் துறையில் முறைகேடு.. கடைமடைக்கு தண்ணீர் இன்றி தவிக்கும் விவசாயிகள்.. மறியலுக்கு தயாரான எம்.எல்.ஏ

Published on 04/08/2018 | Edited on 27/08/2018

 

காவிரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் ஜூலை 19 ந் தேதி மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதிறந்தார். 22 ந் தேதி 7 அமைச்சர்கள் பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறந்துவிட்டனர். அடுத்த நாளே தஞ்சை அருகே கல்வராயன்கோட்டையில் ஆற்றின் தடுப்பு உடைந்தது.

 

protest

 

 

 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த விவசாயிகள் இன்று வல்லவாரி ஆற்றுப்பால் அருகே சுமார் 500 பேர் திரண்டனர். அங்கு வந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் சாலை மறியலுக்கும் தயிரானார்கள். இந்த தகவலறிந்து அங்கு போலிசார் குவிக்கப்பட்டனர்.

 

பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு 500 கன அடி தண்ணீர் விட அதிகாரிகள் ஒப்புதல எழுதிக் கொடுத்ததால் தற்காலிகமாக மறியல் கைவிடப்பட்டது. அதிகாரிகள் வாக்குறுதிப்படி தண்ணீர் திறக்கவில்லை என்றால் மீண்டும் 15 கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றுகூறி கலைந்து சென்றனர்.

   

protest

 

 

 

இது குறித்து எம்.எல்.ஏ மெய்யநாதன் கூறியதாவது.. 

    

அதிக தண்ணீர் இருந்தும் கடைமடைக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிக்கிறார்கள். பிரதான வாய்க்கால் சீரமைக்க ரூ 5 லட்சம் நிதி ஒதுக்கி வேலையே செய்யாமல் நிதி எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர எடப்பாடி துறையிலேயே முறைகேடு நடந்துள்ளதை கண்டுகொள்ளவில்லை. மேலும் 5 நாட்களுக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் சொன்னதால் போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால் தண்ணீர் வரவில்லை என்றால் மீண்டும் பெரிய போராட்டம் நடக்கும் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.