Skip to main content

நடராஜருக்கே வந்த சோதனையா? வைரலாகும் வீடியோ!!!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018
natarajar

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர் மற்றும் தரிசனம் விழாவும், மார்கழியில் ஆரூத்ரா தரிசனம் தேர் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் இந்தியாவின் அனைத்து பகுதியிலிருந்தும் லட்சகணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் தரிசனம் மற்றும் தேரில் வரும் சாமிகளை படம் எடுக்ககூடாது என்று கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 

அதனையும் மீறி வெளியூர்களில் இருந்து யாராவது ஆர்வ மிகுதியால் சாமியை படம் எடுத்துவிட்டால் தீட்சிதர்கள் விலைஉயர்ந்த செல்போன்களை பிடுங்கி தேர்சக்கரத்தில் வைத்துவிடுவார்கள். இதனையும் மீறி கேட்டால் அவர்கள் ஒன்று கூடி தாக்கும் சம்பவமும் நடைபெற்றுள்ளது. இது போன்ற சம்பவம் தற்போது நடைபெற்ற தேர் தரிசன விழாவிலும் அரங்கேறியுள்ளது. எல்லா ஊர்களிலும் சாமியை படம் எடுப்பது போல் எடுத்து விலைஉயர்ந்த செல்போனை இழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
 

இதற்கு மறாக சமூக வலைதளங்களில் நடராஜர், சிவகாமசுந்தரி சாமிகளை அபிஷேகம் செய்வதையும், தேர் மற்றும் தரிசன நிகழ்வின் போது மிக நெருக்கமாக எடுத்த படம், வீடியோ காட்சிகள்  ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பத்திரிகையாளர்கள் செய்திக்காகவும், வெளியில் இருந்து வரும் பக்தர்கள் தூரத்தில் இருந்து சாமியை எடுக்கும் புகைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீட்சிதர்களுக்கு இது போன்ற காட்சிகள் வைரல் ஆகுவது தெரியாதா? என்று வலைதளத்தை பார்க்கும் அனைத்து பொதுமக்களுக்கும் கேள்வி எழுப்புகிறார்கள்.
 

மேலும் சில தீட்சிதர்கள் அவர்கள் செல்போனில் பிடிக்கும் படத்தை கட்டளைகாரர்களுக்கு அனுப்புகிறார்கள் அதனால் தான் இது போன்ற துல்லியமாக படம் வெளியே வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனை கடந்த 2016 ஆண்டில் நடைபெற்ற திருவிழாவின் போது நக்கீரனில் புறக்கனிக்கப்படும் தமிழ் அர்ச்சனை என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம் இதற்கு தீட்சிதர்கள் நாங்க படம் எடுப்பது இல்லை என மறுத்தனர்.
 

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற தரிசன விழாவின் போது அதிகாலை நடைபெற்ற மகாஅபிஷேகத்தை சாமி இருக்கும் இடத்திற்கு எதிரே தீட்சிதர்களின் கட்டளைதாரர்கள் அமரும் இடத்தில் இருந்து எடுத்தது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைபல லட்சம் பேர் டவுன்லோடு செய்து செல்போனில் வைத்துள்ளனர். இதனை யார் எடுத்தது என்ற விபரம் தெரியவில்லை.
 

இதனை பார்க்கும் நெட்டிசைன்கள் நூறு அடி தூரத்திற்கு மேல்  இருந்து படம் எடுப்பதை கண்காணித்து செல்லை பிடுங்கும் தீட்சிதர்களுக்கு அபிஷேகம் நடைபெறும் இடத்திற்கு அருகில் இருந்து எடுத்த வீடியோ யார் எடுத்தது என்று தெரியாதா என்ன? என்ற கேள்வியை எழுப்பி தீட்சிதர்களின் ஆசிர்வதம் இல்லாமல் இது போன்ற வீடியோவை எடுக்கமுடியாது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இது என்னடா நடராஜருக்கே வந்த சோதனை என்று பதிவுசெய்துள்ளனர்.
 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடலூர், சிதம்பரம் செய்தியாளர்கள் சாமியை தூரத்திலிருந்து படம் எடுத்தபோது எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களின் புகைப்பட கருவிகள் துவம்சம் செய்யப்பட்டு தாக்குதல் நிகழ்வும் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பத்திரிகை முதலாளி கருணையால் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
 

இதுகுறித்து தீட்சிதர் ஒருவர் இங்கு மூலவரே மக்களுக்கு காட்சி அளிப்பதால் படம் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அபிஷேக வீடியோவை பார்த்து நாங்களும் அதிர்ச்சி அடைந்தோம். அவ்வளவு கண்காணிப்பாக இருந்தும் இது எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து தீட்சிதர்கள் கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளோம் என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.