Skip to main content

பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம்; விபரீத முடிவெடுத்த ஊழியர்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

 chidambaram annamalai university temporary employees incident 

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக தொகுப்பு ஊதிய ஊழியர் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக 205 பேர் தொகுப்பு ஊதிய ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் மாத ஊதியம் ரூ. 1500 இல் இருந்து தற்போது ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த 13-ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தை அறிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், துணைவேந்தர் அலுவலகத்திற்கு சற்று தூரம் உள்ள இடத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 11வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துலிங்கம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக இதனை அறிந்த சக ஊழியர்கள் இவரை மீட்டு ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 chidambaram annamalai university temporary employees incident 

 

இதனையடுத்து தொகுப்பு ஊதிய ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியலைக் கைவிட்டனர். மேலும், பணி நிரந்தரம் செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்