Skip to main content

தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

cauvery water mettur dam water level raised

 

 

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியில் இருந்து 22,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

இன்று (10/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 11,024 கனஅடியிலிருந்து 22,969 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.03 அடியாகவும், நீர் இருப்பு 62.31 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16,000 கனஅடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 950 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்