Skip to main content

இ-பாஸ் காரில் கஞ்சா விற்பனை.. தொடர் திருட்டுக் கும்பல் சிக்கியது..!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

Cannabis sale in e-pass car .. serial theft gang caught ..!

 

தூத்துக்குடி நகரின் ஜார்ஜ் ரோடு, அண்ணா நகர், தாமோதர் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை நடந்துவந்தது. இதுகுறித்து டவுண் டி.எஸ்.பி.யான கணேஷன் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உட்பட தனிப்படையை அமர்த்தி, எஸ்.பி. ஜெயக்குமாரின் உத்தரவின்படி 8 பேர் கொண்ட போலீஸ்படை பல்வேறு இடங்களில் விசாரணையை மேற்கொண்டனர்.

 

தனிப்படையின் விசாரணையில் 5 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ. 2.05 லட்சம் அளவிலான நகைகளை மீட்ட தனிப்படையினர், விசாரணையில் அந்தக் கும்பலின் தலைவன், தாமோதரன் நகரைச் சேர்ந்த செல்வ சதீஷ் என்ற செல்வத்தை (21) தேடினர். தீவிரத் தேடலில் ஜார்ஜ் ரோடு பகுதியில் தலைமறைவாக இருந்த செல்வத்தைக் கைதுசெய்த போலீசார் அவரிடமிருந்து லேப்டேப், செல்ஃபோன், 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நபரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு கூட்டாளியான முனியசாமிபுரம் டேனியல்ராஜ் என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவரவே அவருக்கும் வலை வீசினர்.

 

கிடைத்த தகவலின் அடிப்படையில், டேனியல்ராஜ் காரில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தபோது தனிப்படையினர் வளைத்திருக்கின்றனர். அதோடு அந்த நபரிடமிருந்து சுமார் 65 ஆயிரம் மதிப்பிலான நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்தத் தொடர் கொள்ளைக் கும்பலிடமிருந்து மொத்தம் மூன்றரை லட்சம் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

மேலும் விசாரனையில், டேனியல் ராஜின் மீது மீளவிட்டான், தென்பாகம் காவல் நிலையம், நெல்லையின் பேட்டை போன்ற காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையிலிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களின் வேறு தொடர்பு பற்றிய விசாரணையும் நடந்துவருகிற நிலையில், திருட்டு நகைகளை வாங்கி தனியார் நிறுவனத்தில் அடகுவைத்ததும் தெரிய வந்திருக்கிறது.

 

தொடர் விசாரணையில், இவர்கள் பயன்படுத்திய கார், லாக்டவுண் காரணமாக பணிக்குச் செல்வதற்கு வசதியாக டேனியல் ராஜின் உறவினர் ஒருவர் பயன்படுத்திவந்திருக்கிறார். அந்தக் காரை உறவினருக்கே தெரியாமல் பயன்படுத்தி, காரில் கஞ்சா விற்றதும் தெரியவந்திருக்கிறது. டவுண் டி.எஸ்.பி. கணேஷனின் தனிப்படை, கஞ்சாவுடன் அந்தக் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.